Sunday, 12th May 2024
ebook தொடர்புக்கு : +91 - 9444983174
பலரது முகம் வெண்மையாக இருந்தாலும் அவர்களின் வாயை சுத்தி கருமையாக இருக்கும்.இதனை போக்க பல வழிகளை பின்பற்றி விலை உயர்ந்த பொருட்கனை பயன்படுத்துவார்கள்.பொதுவாக இம்மாதிரியான சரும கருமைகளுக்கு சிகிச்சை தேவையில்லை. ஆனால் ஒருசில இயற்கை வழிகளின் மூலம் இந்த பிரச்சனைகளுக்கு சிகிச்சை அளிக்கலாம். இந்த ஒரே ஒரு உணவு பொருள் போதும். இப்படி செய்து கருமையை மாயமாக்கி விடுங்கள்.
கடலை மாவு
கடலை மாவுடன் சருமத்தில் உள்ள கருமையைப் போக்க உதவும் மஞ்சளை சேர்த்துப் பயன்படுத்தினால் நல்ல பலன் கிடைக்கும். அதற்கு ஒரு பாத்திரத்தில் 2 டேபிள் ஸ்பூன் கடலை மாவை எடுத்துக் கொள்ளவும்.அதில் அரை டீஸ்பூன் மஞ்சள் தூள் மற்றும் சிறிது நீர் ஊற்றி பேஸ்ட் செய்து கொள்ளவும்.பின் அந்த கலவையை வாயைச் சுற்றி தடவி 10 நிமிடங்கள் ஊற வைக்கவும்.பின் குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும்.